Pages

Sunday, June 15, 2014

உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்............

யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்.
உனக்காக காத்திருப்பதை விட என்
மரணத்திக்காக காத்திருக்கலாம்
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
நீ இல்லாத போது.
உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
சிந்துகிறது... "நீ இல்லை"
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
அதுவும் நிரந்தரம் இல்லை.
நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
என் முச்சு காத்தோடு மட்டும் தான் உன் உரசல்கள்..
நீ காத்தோடு தானே கலந்து விட்டாய்
என் உயிரில் கலந்தது போல...
என் உயிர் நீ இல்லை,
அர்த்தம் இல்லாதது தான் என் பயணம்
ஆனாலும் தொடர்கிறேன் உனக்காக,
உன் மறு ஜென்மத்துக்காக...
நம் குழந்தையாகவாவது நீ பிறப்பாய்
என்ற நம்பிக்கையில் உன்னை சுமக்கிறேன்
இனி உனக்கு மரணமே இல்லாத என் கருவறையில்..

0 comments

Post a Comment