Pages

Thursday, June 12, 2014

சந்தேகம்


சந்தேகம் சந்தேகம்

வீணான சந்தேகம்

வசந்தம் வீசும் வாழ்கையில்

புயலாய்த் தாக்கி

நன் நெஞ்சங்களையும்

நாராக்கும் நஞ்சு

பொய்யை மெய்யாய்க்காட்டி

பொல்லா அரக்கனாய்

நம்மை மாற்றி

மாய்க்கும் உயிர்க்கொல்லி

இதை உணராமல் -அதை

அள்ளி அணைத்தால் நம்மைத்

தள்ளிடும் மீளா பாதாளம்

ஆனால் இதை உணர்ந்து

அதை வேரோடு கிள்ளி எறிய

என்றுமே வசந்தம் வீசும்

வாழ்கை கிட்டுமே

0 comments

Post a Comment