Pages

Monday, June 16, 2014

இருவர்

பெரியாரும் பெருமானாரும்
அப்படியொன்றும்
பெரிய இடைவெளியில்லை
அவருக்கும்
இவருக்கும்
அவர் இனத்தலைவர்
இவர் இனமானத் தலைவர்
இருவரும் போராளிகளே
பெண்விடுதலைக்கும்
மண்விடுதலைக்கும்
பெரியவர் தொடங்கியதை
பெரியார் தொடர்ந்தார்
இருவருக்கும்
பிடித்தது கருப்பு
வெளிச்சத்தின்
திமிர் அடக்க
வினாக்களற்ற விடைகள்
நிறைய அவரிடம்
விடைகளற்ற வினாக்கள்
நிறைய இவரிடம்.
இவருக்கும் அவருக்கும்
வாரிசுகளாக மக்களே
இருந்தனர்
இருவரும்
உயர்குடியில் பிறந்தவர்கள்தான்
தாழ்குடிகளுக்காக
தங்களை இழந்தவர்கள்
அவருக்காவது
இறைவன் துணை
இவருக்கு
அறிவே துணை

0 comments

Post a Comment