Pages

Wednesday, June 11, 2014

முத்தம்

முத்தம் - நாகூர் கவி
காதலுக்கு
உயிர்த்துளி...!

கன்னத்தில் இடும்
ஒத்தடம்...!

காதலின்
வழித்தடம்...!

இதழ்கள் வாசிக்கும்
இனிமையான இசை...!

இதழ்கள் செய்யும்
இதமானத் தட்டச்சு...!

வார்த்தைகளற்ற
வசீகரமான மொழி...!

காதலர்களின்
வலி நிவாரணி...!

இதயம் உள்ளவரை
இது நிலைக்கும்...!

இதயம் உள்ளவரை
இதில் நனைக்கும்...!

சிபாரிசின்றி கிடைக்கும்
செல்லப் பரிசு...!

இன்பத்தின்
அன்பானத் தழுவல்கள்...!

இதழ்களின்
அழகானத் தகவல்கள்...!

சப்தம் போட்டால்
இனி யுத்தம் செய்யாதே
முத்தம் போடு....!

இனி...
மொத்தமும் உன்வசம்
காரணம் முத்தத்தின் சகவாசம்...!

0 comments

Post a Comment