Pages

Saturday, June 21, 2014

துளி மழை-2

கொஞ்சம் 
தாமதித்தே 
வந்திருக்கலாம் 
நான்; 
இதேபோல 
மாலைநேர 
பொழுதொன்றில் 
சாலையோர 
நிழற்குடையில் 
நிற்கையில்; 
கடைசியாக 
அவனின் 
தோள்சாய்ந்து 
கைகள் பற்றி 
பார்த்த 
மழை ஞாபகம் 
வராமலாவது 
இருந்திருக்கும். 

ஒளிரும் 
விளக்குகள் 
எத்தனை 
என 
எண்ணிப்பர்த்ததும்; 
பின் 
மழை 
நின்ற 
சாலையில் 
இருவரும் 
நடக்கையில் 
ஈரத்தின் 
குளிர்காற்று 
கொடுத்த 
வெதுவெதுப்பு 
இன்னமும் 
உறைந்திருக்கிறது 
என்னுள்; 

இடது விழியின் 
ஒரு ஓரமாய் 
உன்னை 
எப்போதும் 
திரும்பிபார்ப்பதை 
போல 
ஒரு 
சிறு 
ஞாபகமாய் 
வந்துபோகிறது 
இந்த மழை இரவு...

0 comments

Post a Comment